யாழில் பிரபல ஆலயம் ஒன்றிற்கு சென்ற பக்தர்களுக்கு இப்படி ஒரு நிலை!

யாழில் பிரபலமான ஆலயங்களில் ஒன்றான வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின் தேர் திருவிழா நேற்று நடைபெற்றிருந்தது.

இந்த நிலையில் தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த 5 பக்தர்களிடம் தங்க சங்கிலிகள் களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு களவாடப்பட்ட சங்கிலிகள் 81/2 பவுண் நிறையுடையவை என அதனை பறிகொடுத்தவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அது தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.