இலங்கையில் ஆடைகளின் விலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிகரிப்பு!



இலங்கையில் பல்வேறு பொருட்கள், சேவைகளின் கட்டண அதிகரிப்பு போலவே ஆடைகளின் விலைகளிலும் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக அனைத்து ஆடைகளின் விலைகளும் 30 – 31 வீதம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நாட்டு சூழ்நிலையின் காரணமாக உள்ளூர் ஆடைத் தொழில்துறை கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும், அதனால் ஆயிரக்கணக்கானோர் வேலைகளை இழப்பதாகவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.