இலங்கையில் இப்படியொரு பொலிஸ் அதிகாரியா! வைரலாகும் புகைப்படம்


முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற மாணவன் விபத்துக்குள்ளாகியுள்ளான்.

மேலும் இந்த விபத்து சம்பவம் நேற்று புதன்கிழமை (16-03-2022) கடுவலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அருகில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நவகமுவ பிரதி பொலிஸ் பரிசோதகர் சுமித் லக்ஷ்மன் சில்வா அவர்கள் உடனடியாக தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் நவகமுவ வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.மேலும் விபத்துக்குள்ளான சிறுவனுக்கு குறித்த பொலிஸ் பரிசோதகர் உணவு வாங்கி தனது கையால் ஊட்டி விட்ட சம்பவம் பெரிதும் வரவேற்க தக்கதாக இருந்தது.

இதுகுறித்த புகைப்படங்களை முகநூலில் வைரலாக பரவி வருகின்றது.