தொடர்ந்து இலங்கையில்! 10 மணிநேர மின்வெட்டு




போதிய எரிபொருள் மற்றும் நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் தற்போது ஆறரை மணிநேரமாக நடைமுறையில் இருக்கும் மின்வெட்டு அடுத்த வாரத்திற்குள் 10 மணிநேரமாக குறைக்கப்படும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் உள்ள நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தைப் பொருத்து இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், தீவுக்கு டீசல் தொடர்ந்து விநியோகம் செய்யப்படாததால், டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் ஜெனரேட்டர்களின் பயன்பாட்டை கைவிட வேண்டும்.

கெரவலப்பிட்டி எரிபொருள் மின் நிலையத்திற்கு தேவையான எரிபொருள் போதியளவு கையிருப்பில் இல்லாத காரணத்தினால் இன்று மின் உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.