யாழில் கொழும்பில் இருந்து வந்த அன்றிகளால் பல இண்ணல்களை எதிர்நோக்கும் யாழ் பொதுமக்கள்!

யாழில் இருந்து கொழும்பிற்கு இடம்பெயர்ந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பின் நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் பொருளாதார சிக்கலினால் சொந்த ஊருக்கு வரும் அன்றிகளால் பெரும் இண்ணல்களை சந்தித்து வருவதாக யாழ் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அன்றிகள் தனது சொந்த வீட்டினை யாழில் வேறு குடும்பத்திற்கு வாடகைக்கு விட்டுச்சென்று விட்டு தற்போது பொருனாதார சிக்கலினால் சொந்த ஊருக்கு வந்து தனது வீட்டில் உள்ள குடும்பங்களை எப்படியாவது எழுப்பவேண்டும் என்ற எண்ணத்தில் அந்த குடும்பத்தலைவரின் மீது பல பொய் குற்றச்சாட்டினை பொலிஸாரிடம் முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைப்போன்று யாழில் உள்ள ஒரு பகுதியில் தனது சொந்த வீட்டிற்கு வந்த அன்றி ஒரால் ஏற்கனவே வாடகைக்கு தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பத்தை உடனடியாக வீட்டினை காலி செய்ய கூறியுள்ளார்.

அக்குடும்பத்தினர் எங்களுக்கு ஒப்பந்தப்படி இன்னும் ஒரு மாதகாலம் அவகாசம் இருக்கின்றது என கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அன்றி பொலிஸாரிடம் அக்குடும்பத்தின் தலைவர் தன்னை குளிக்கும்போது எட்டிப்பார்க்கினார் என பொய் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொலிஸார் அக்குடும்பத்தினை விசாரித்தபோது தனது தந்தை அவ்வாறெல்லாம் பாத்திருக்க மாட்டார் எனவும் நடந்ததை கூறியுள்ளார் இதையடுத்து குடும்பத்தினரை எச்சிரித்து பொலிஸார் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் இதேபோல் யாழில் வேறு பகுதியிலும் நிகழ்ந்துள்ளது அனைவரும் அவதானமாக இருக்குமாறு அநிவுறுத்தப்பட்டுள்ளது.