மதுபோதையில் ஆம்புலன்சை செலுத்தி பொதுமக்களை மோதித்தள்ளிய சாரதி!

ஆம்புலன்ஸ் சாரதி ஒருவர் மதுபோதையில் ஆம்புலன்ஸை செலுத்தி வாகனங்களிடையே விபத்து ஏற்படுத்திய சாரதியால் அப்பகுதியில் பெரும் பதட்ட நிலை நிலவியது.

இச்சம்பமவானது ஹட்டன் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் ஹட்டனில் இருந்து பொகவந்தலாவை பயணம் செய்திருந்தததையடத்த மது போதையில் இருந்ததால் பொதுமக்களை மோதித்தள்ளிவிட்டு வாகனங்களுக்கிடையே விபத்தினை ஏற்படுத்தி சென்றுள்ளார்.

இதனை அவதானித் பொலிஸார் அம்பியூலன்சை வழிமறித்து சாரதியை கைது செய்துள்ளனர்.

மேலும் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.