யாழ் நோக்கி வந்த ரயிலில் குடிகாரர்கள் உதைந்ததில் கீழே விழுந்து உடல் நசிந்து பலியான பாதுகாப்பு உத்தியோகத்தர்!

யாழ் நோக்கி வந்த புகையிரதத்தில் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கீழே விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது இன்றையதினம் கொழும்பில் இருந்து யாழிற்கு வரும் கடுகதி புகையிரதத்திலேயே இடம்பெற்றுள்ளது.

குறித்த புகையிரதத்தில் சிலர் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு மது அறுந்திய நபர்கள் புகையிரதத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற பாதுகாப்பு அதிகாரி சமாதானப்படுத்தும் வேளையில் வாக்கு வாதம் கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது நபர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியை உதைந்ததில் அவர் வெளிளில் விழுந்து ரயிலுக்கு அடியில் நசிப்பட்டு இற்ந்துள்ளார்.

இது குறித்தான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.