யாழிற்கு பெருமையை சேர்த்த 22 வயது இளைஞர்!

தமிழ் இளைஞர்களில் முதன்முறையாக யாழ். இளைஞர் ஒருவர் கொமன்வெல்த் கூடைப்பந்து போட்டிக்கு தெரிவாகி யாழிற்கு பெருமை சேற்றுள்ளார்.

இந்த கொமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இலங்கையில் நடத்துவது இதுவே முதல்தடவை எனவும் அதில் பங்குபெறும் முதல் தமிழர் எனவும் பெருமையை சேற்றுள்ளார்.

இவ்வாறு தெரிவான இளைஞன் 22 வயதுடைய யோகநாதன் சிம்ரோன் என தெரியவந்துள்ளது.

இவர் சிறுவயதில் இருந்து கூடை பந்தாட்ட போட்டியில் அதிகளவான வெற்றிகளை பெற்றதையடுத்த மட்டக்களப்பில் நிறைய பரிசுகளை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளார்.

குறித்த இளைஞர் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையில் கல்வி கற்றுவ வந்தது குறிப்பிடத்தக்கது.