யாழில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் உட்பட 6 பேர் கைது!

யாழில் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 3ம் திகதி இதே போன்று கைதான பெண் ஒருவரின் உறவினர்களே இவ்வாறு கைதாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.