யாழில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான பெண்ணிற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளம் குடும்ப பெண்ணை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 26 வயதுடைய குடும்பெண்ணே நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 3 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சந்தேகநபர் நேற்று யாழ்.பிரதம நீதியரசர் நளினி சுபாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேக நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்க முடியாது.

அவரை வரும் 21ம் தேதி வரை காவலில் வைக்க மனுவில் உத்தரவிட்டார்.