நீர்க்குழாய் திருத்தச் சென்ற நபர் உயிரைப்பறித்த மின்சாரம்!

கனவரல்ல EGK தோட்டப் பிரிவில் உள்ள தோட்டத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த அதே தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர், தோட்ட தொழிற்சாலை அதிகாரி ஒருவரின் வீட்டுக்கு நீர் குழாய் திருத்தம் செய்யச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

பின்னர் குடிநீர் குழாயை சீரமைக்கச் சென்றவர் நீண்ட நேரமாக வராததால் வாட்ச்மேன் சென்று பார்த்தபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்ததை அவதானித்தார்.

சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்ததையடுத்து, நமுணுகுள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.