காற்சட்டைக்குள் கேமெரா பொருத்தி பெண்களை தவறாக வீடியோ எடுத்த பேருந்து நடத்துனர்!

சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த கமெரா மூலம் பெண்களை படம் பிடித்த நபரை பிடபெத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஸ் நடத்துனராக கடமையாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தனது நீண்ட கால்சட்டையின் கீழ் பகுதியில் இந்த கமெராவை பொருத்தி அதன் ஊடாக பெண்களை தேவையில்லாமல் வீடியோ எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 36 வயதுடைய பிடபெத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை மொரவக்க நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.