யாழில் போதைப்பொருள் பாவித்த மகனை எனக்கு மகன் இனி வேண்டாம் என பொலிஸில் ஒப்படைத்த தாய்!

எனது பிள்ளை எனக்கு வேண்டாம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய்
ஒருவர் தனது 15 வயது மகனை யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸாரிடம்
ஒப்படைத்துள்ளார்.

கொடிய போதைப்பொருளான ஹெராயினுக்கு தனது
மகன் அடிமையாகியுள்ளதாகவும், அவன் தனக்கு தேவையில்லை எனவும்
தாய் ஒருவர் பொலிஸாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையடுத்து, மாணவனை நேற்று சிறுவர் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அச்சுவேலியில் உள்ள
சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையில் சேர்க்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

யாழ். குடாநாட்டில் அதிகளவான மாணவர்கள்
ஹெரோயின் பாவனையில் ஈடுபட்டுள்ள நிலையில்,
அவர்களில் பெரும்பாலானோர் தாமாகவே மருத்துவ
சிகிச்சையை நாடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.