யாழில் சற்றுமுன் பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

யாழில் சற்றுமுன் பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக சகோதர ஊடகம் மூலம் செய்தி வெளியாகியுள்ளது.

இச்சம்பவமானது யாழ்.முகமாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பஸ்ஸுடன் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 25 கண்ணிவெடி அகற்றும் தொழிலாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது டிப்பர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.