யாழ். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருப்பவர்களுக்கான முதல் கட்ட நேர்முகத் தேர்வை தென்மராட்சி செயலகம் நடத்தவுள்ளது.
இந்த நேர்காணல் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும்.
மேற்படி நேர்காணல் எதிர்வரும் 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை தென்மராட்சி செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு தங்களின் தொழில் தகைமைச் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்களுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.