யாழில் வெட்டுக்காயங்களுடன் பொலிஸாரினால் மீட்கப்பட்ட நபர்!

யாழில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பமானது இன்று யாழ்.வடமராட்சி – வல்லிபுரக் குறிச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் கிடப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மேலும் தகவலரிந்து சம்பவ இடத்திற்கு வந்த பருத்தித்துறை பொலிஸார் அந்நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.