யாழில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : படுகாயமடைந்த நபர்!

யாழில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.இளவாலை – பொியவிளான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கீரிமலை, இளவாலை பகுதியை சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த இருவரும் அம்புலன்ஸ் மூலம் தெல்லிப்பழை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.