யாழில் போதைக்கு அடிமையான மகனை பொலிசாரிடம் ஒப்படைத்த தாய்!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடும்பரை மேற்கைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்பதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம்
இளைஞனின் தயாரால் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கையளிக்கப்பட்ட இளைஞன் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றி வீட்டில் உள்ளதோடு கடந்த 2 வருடங்களாக போதைப்பொருள் பாவனையால் ஒழுங்காக உணவு உண்ணாமல் இரவு தூக்கமின்மை போன்ற பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்.

ஆதலால் அவன் திருந்தி நல்ல நிலமைக்கு வரவேண்ம் என்ற எண்ணத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தொயார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த இளைஞன் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட உள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.