யாழில் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் வீடொன்றில் இருந்து இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன.

மேற்படி திருட்டுச் சம்பவம் இன்று (19-10-2022) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த வீட்டில் வயோதிப பெண்கள் இருவர் வசித்து வந்ததுடன், இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

மட்டக்களப்புக்குச் சென்றவர்கள் இன்று வீடு திரும்பியபோது 2 தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் ஏனைய இலத்திரனியல் உபகரணங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.