நேற்று மதியம் மண்டு மேற்கு பனங்காட்டு பகுதியில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றிருந்த வேளையில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் ஒன்று வீட்டில் இருந்த சுமார் 6 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
வீட்டின் புகைபோக்கி வழியாக உள்ளே நுழைந்த திருடர்கள், வீட்டில் இருந்த நகைகளை திருடி, வீட்டின் கதவு வழியாக தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.