யாழில் கைதான 45 வயது நபர் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!

நீண்டகாலமாக கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த உடுவில் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகரின் கீழ் கடமையாற்றும் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து மூன்று கிலோ 100 கிராம் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த கஞ்சா போதைப்பொருளை கொள்வனவு செய்ய வந்த பால்பண்னை வித்தியங்காடு பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் வியாபாரியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தான் நீண்டகாலமாக யாழ்.நகரின் புறநகர் பகுதிகளில் மாவா போதைப்பொருளை கொண்டு செல்வதாகவும், நல்ல வருமானம் பெற்று வருவதாகவும், நீண்ட காலமாக மிகவும் நுட்பமான முறையில்.