யாழில் குழந்தை பிரசவித்த 15 வயது மனைவி !

யாழில் 15 வயது சிறுமி ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளதாக பொலிஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த சிறுமியே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்றையதினம் காடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அச்சிறுமி தொடர்பில் தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் அச்சிறுமிக்கு 18 வயதினையுடைய கணவன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.