யாழ்.பல்கலைகழக முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் விடுதலை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் சகல வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் என்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனிடையே, அனைத்து வழக்குகளில் இருந்தும் மேற்படி இருவரையும் முழுமையாக விடுவித்து மனுவில் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்,

ஜனாதிபதியின் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.