யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் !

வல்லை பகுதியில் மோட்டார் வாகனம் ஒன்று வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நேற்று (12) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நெல்லியடி திருமகள் சோதி வீதியைச் சேர்ந்த பூ கவிதாசன் (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் மீட்டு பருத்துரை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.