பண்டிகை காலத்தில் விசேட புகையிரத சேவைகள் ஆரம்பம்

நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு, தமது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக, விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

வழமையான, தூரப்பிரதேச புகையிரத சேவைகளுக்கு மேலதிகமாக, இந்தத் புகையிரதகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக புகையிரத போக்குவரத்து பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை, இந்த புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளன.