ஏரியில் மீன் பிடிக்க சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்!

மொனராகலை – கொவிதுபுர பகுதியில் உள்ள ஜெயந்தி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றையதினம் (20-04-2024) காலை பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கொட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இவர் நேற்று முன்தினம் (19) வீட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொவிதுபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.