2022ஆம் ஆண்டுக்கான எல்.பி.எல் கிரிக்கெட் தொடரை Jaffna Kings அணி வென்றுள்ளது.
LPL தொடரின் இறுதிப் போட்டி Colombo Stars மற்றும் Jaffna Kings அணிகளுக்கு இடையே ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.
இதற்கமைய, தொடர்ந்து 3 முறை எல்.பி.எல் கிண்ணத்தை வென்ற அணியாக Jaffna Kings அணி சாதனை படைத்துள்ளது.
Colombo Stars அணியுடனான நேற்றைய இறுதிப் போட்டியில் Jaffna Kings அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Colombo Stars அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதற்கு முன் LPL போட்டிகளில் ஏற்கனவே 2020 ஆம் மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் Jaffna Kings அணி செம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.