யாழில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என மாணவி எடுத்த விபரீத முடிவு !

யாழில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது யாழ் சாவகச்சேரியில் கடந்த 21ம் திகதி இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

குறித்த பகுதியைசேர்ந்த டிலக்சிகா என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவியின் தந்தையும் இறுதி யுத்தத்தில் மரணமடைந்ததை அடுத்து தாயார் மிகவும் கஸ்ரத்து மத்தியில் அவரை படிக்கைவைத்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மாணவியின் முடிவால் பாடசாலை தரப்புகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.