யாழில் இன்று சீன மக்களால் கொடுக்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் மக்களிடம் கையளிப்பு..!

யாழில் இன்றையதினம் சீன மக்களால் பகிர்ந்தளிக்கப்பட்ட உலர் உணவுப்பொதிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிகழ்வானது இன்று காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழவில் முதல் கட்டமாக யாழ். மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1320 பயனாளிகளுக்கு குறித்த உலர் உணவுப்பொருட்களானது சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் ஆகியோர் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நிகழிவில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட மேலதிக அரசாங்க(காணி) அதிபர் முரளிதரன்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் கே.பாலகிருஸ்ணன், இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள்

உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.