தனியார் ஹோட்டலுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்த நபரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நல்லூர் கோவில் வீதியில் உள்ள தங்கும் விடுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பண்டாதரிப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.
மேலும், இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து இன்னும் யாழ். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.