யாழில் பொலிசாருக்கு எதிராக வீதிக்கு இறங்கிய கிராமசேவகர்கள்!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழி பிரதேச செயலக கிராம சேவகர்களால் இன்று தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜே/239 பிரிவு கட்டுவன் மேற்கு கிராம சேவகர் அலுவலகம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தெல்லிப்பப்பா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் போது, ​​அமைதி அதிகாரி, அமைதிக்கான நீதியரசர், இப்படியா? இன்று, நாளை உங்களுக்கு பாதுகாப்பு இல்லை, எங்கள் சேவை பாதுகாப்பில்லை என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.