ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்படும் கட்டணம் ! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு !

01 ஜனவரி 2023 முதல் தூதரக விவகாரப் பிரிவின் சான்றிதழ்கள்/ஆவணங்களின் சான்றளிப்புக்கான கட்டணத்தை வெளியுறவு அமைச்சகம் திருத்தியுள்ளது.

புதிய கட்டணத்தின்படி, தேர்வுத் துறையால் வழங்கப்படும் தேர்வுச் சான்றிதழ்களுக்கு 800 ரூபாய்.

இலங்கை அரசாங்கத்தால் வெளிநாட்டுப் பிரஜைக்கு வழங்கப்படும் எந்தவொரு ஆவணத்திற்கும் 3,000 ரூபாயாகவும், எந்தவொரு ஏற்றுமதி ஆவணத்திற்கும் 8,000 ரூபாயாகவும், மற்ற ஆவணங்களுக்கு 1,200 ரூபாயாகவும் இது திருத்தப்பட்டுள்ளது.