யாழ்ப்பாணத்தில் இரண்டு தமிழ் பொலிஸ் அதிகாரியினால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: வெளியான காணொளி

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு தமிழ்ப் பொலிசார் சிறுமி ஒருவரை இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதை வீடியோவாக பதிவு செய்து அதனை காட்டி மிரட்டி அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், நிவாரணம் வழங்குவதாகக் கூறி 17 வயதுச் சிறுமியை இரண்டு தமிழ்ப் பொலிசார் அழைத்துச் சென்று காலி வீட்டில் வைத்து பாலியல் தெரியவந்துள்ளது.
செய்தனர்.

பிரதான சந்தேக நபரான தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர், சம்பவம் இடம்பெற்ற போது வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திலும், பின்னர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திலும், தற்போது முருங்கன் பொலிஸ் நிலையத்திலும் கடமையாற்றியவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களான பொலிஸார் சிறுமி வன்புணர்வுக்கு உட்படும் காணொளியை பாடசாலை மாணவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் பாடசாலை மாணவர்களும் சிறுமியை வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.