நீராடச்சென்ற 17 வயதுடைய இரு மாணவர்கள் நீரிழ் மூழ்கி உயிரிழந்த சம்பம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்று மாத்தறையில் இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாத்தறை மற்றும் அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நால்வர் நீராடச் சென்றதாகவும் அதில் இருவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் கூடுதல் வகுப்புகளுக்கு செல்வதாக கூறி வீடுகளில் இருந்து சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.