யாழில் இன்றும் வீட்டிற்குள் புகுந்து கத்திமுனையில் கொள்ளையடித்துச்சென்ற கும்பல் !

யாழில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

ஆயுதம் ஏந்திய நான்கு பேர் கொண்ட கொள்ளை கும்பல் நள்ளிரவில் புகுந்து வீட்டில் இருந்தவர்களை கத்தி முனையில் காட்டி மிரட்டி 10 பவுன் தங்க நகைகளை மிரட்டியுள்ளனர்.

ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 3 மொபைல் போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.