தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடவும்; ரணில் பணிப்புரை!

முன்னாள் பாப்பரசர் 16ம் பெனடிக்ட்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் அவர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

முன்னாள் புனித பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் மறைவு நிகழ்வு நாளை (05) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.