யாழில் வாகனத்தை கடத்திய மூவர் ! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

யாழ்ப்பாணத்தில் இருந்து பளை நோக்கி சென்ற கெப் வண்டியை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பளை வைத்தியசாலை நோக்கி பயணித்த பெரிய பளை சந்திக்கு அருகில் வீதியை மறித்த மூவர், அங்கிருந்தவர்களை தாக்கி வாகனத்தை கடத்திச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் ஆனையிறவுச் சந்தியில் கடமையாற்றியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து வாகனத்தை கடத்திச் சென்ற கொள்ளையர்களை போலீஸார் தடுக்க முயன்றனர். எனினும், சந்தேகநபர்கள் காவல்துறையின் உத்தரவை மீறி காரை ஓட்டிச் சென்றனர்.

இந்நிலையில் குறித்த வாகனங்களை துரத்திச் சென்ற பொலிஸார் வாகனத்தை கைப்பற்றி சந்தேகத்தின் பேரில் 3 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 24, 30 மற்றும் 34 வயதுடைய மாங்குளம் மற்றும் பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.