யாழில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் பலி !

யாழ். தென்மராட்சி மிருசுவில் வடக்குப் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (27.01.2023) மாலை 6:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

34 வயதான தங்கவேல் மோகனதாஸ் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் சாவகச்சேரி ஆதார் மருத்துவ சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.