இலங்கை தமிழர்கள் தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள்!

இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்கும் முகமாக, சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

மேலும் உலகத் அமைப்பு, நியூயோர்க் இலங்கை தமிழ் சங்கம், வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு என 6 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், காங்கிரஸ் உறுப்பினர்களிடம் இது குறித்து கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இலங்கையில் 7 தசாப்த காலத்திற்கும் மேலாக தொடரும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஆக அவர்கள் இதனை கடிதம் ஒன்றின் ஊடாக இந்த  கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

மேலும் யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் மீது மிக மோசமான குற்றங்கள் சுமத்தப்பட்டாதாகவும் இதனால் சுமார் 3 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் ஆக்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதே சமயம் இனப்படுகொலையை தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறியிருப்பதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இது குறித்து கருத்து தெரிவித்திருந்ததாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் தமிழ் மக்களின் அரசியல் அடையாளத்தை சுதந்திரமாக நிர்ணயித்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் விவகாரத்தில், சர்வதேச சட்டங்கள் அனுசரிக்கப்படுவதை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டும் என மேலும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.