யாழில் இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி !

இலங்கையின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெரும்பகுதிகளில் சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இன்று கருப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட நிலையில் அவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்