யாழில் கரையொதிங்கிய பெண் ஒருவரின் சடலம் ! தீவிர விசாரணையில் பொலிஸார் !

யாழில் கரையொதிங்கிய பெண்ணின் சடலத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது இன்று யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கரை ஒதுங்கிய சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சடலத்தை கரை ஒதுங்கியதையடுத்து பொதுமக்கள் கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பெண் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொன்று கடலில் வீசி எறிந்தார்களா என யாழ்.பொலிசார் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை குறித்த கடற்கரைக்கு வந்த நபர் ஒருவர் தனது தாயை காணவில்லை என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நீதவான் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி அப்பகுதிக்கு வரும் வரை சடலத்தை மீட்க முடியாது என்பதால் அடையாளம் காண முழக்கமிடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.