யாழில் பிரபல சட்டத்தரணி விபத்தில் பலி!!

யாழில் பிரபல சட்டத்தரணி ஒருவர் விபத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தினையடுத்து சட்டத்தரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்செ பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் அவர் மோட்டர் சைக்கிள் இயக்கிய வேளையில் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறி விழுந்ததையடுதத்து தலைக்கவசம் கலண்டமையால் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.