யாழில் ஜனாதிபதி வருகையை எதிர்த்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல சட்டத்தரணி உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டதால் பதற்றம்!

யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.