இலங்கையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் பல பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது அதற்கமைய பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்தன் காரணமாக கால்நடை உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு கடுமையான செலவு ஏற்ப்படும் என்பதால் பொருட்களின் விலையும் இரட்டிப்பாகும் என தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.