யாழில் எரிபொருள் நிலையத்தில் க்யூ. ஆர். குறியீடு கேட்டதால் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம் !

யாழில் எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்வரிடம் க்யூ. ஆர். குறியீடு கேட்தால் ஆத்திரமடைந்த நபர் எரிபொருள் ஊழியர் மீது வாள்வெட்டு சம்பவம் மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பமவமானது நேற்று (16) இரவு 11:00 மணியளவில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து ஊழியர் கையில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.