யாழில் விபத்தில் உயிரிழந்த மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர்க்கு யாழ்.போதனா வைத்தியசாலை வழங்கிய கௌரவம்…!

யாழில் விபத்தில் உயிரிழந்த தகது மகனின் சிறுநீகத்தை பெற்றோர் தானமாக வழங்கியயைடுத்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அதிதிகளாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளதாக யாழ். செய்தி தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்வானது இன்று யாழ். பேதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

விபத்து மற்றும் திடீர் இழப்பின் மூலம் இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் அதனால் உறுப்புக்களை பெற்றவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

அந்தவகையில் பெற்றோர் சம்மதத்துடன் சத்திரசிகிச்சையின் மூலம் இன்று சிறுநீரகம் சத்திர சிகிச்சையின் பின்னர் மாற்றப்பட்டது.

இதனையடுத்து உறுப்பு தானம் செய்வதற்கு ஒப்புக்கொண்ட பெற்றோரை அதிதிகளாக வரவேற்கப்பட்டு வைத்தியசாலை நிர்வாகம் அவர்களுக்கு பாராட்டு வழங்கி கௌரவப்படுத்தியுள்ளனர்.