யாழில் இளம் குடும்பப் பெண்ணும் குழந்தையும் கடத்தப்பட்டதால் பரபரப்பு!

யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர், குழந்தையுடன் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இன்று (20) பகல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

டச்சு வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து 31 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணும் 3 வயது குழந்தையும் கடத்தப்பட்டுள்ளனர்.

வாகனத்தில் வந்த 4 பேர் திடீரென வீட்டுக்குள் புகுந்து குடும்பத்தைச் சேர்ந்த யுவதியை வாகனத்தில் ஏற்றிவிட்டு அழுது கொண்டிருந்த குழந்தையையும் வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் கனடாவில் வசிப்பதாக கூறப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.