யாழில் ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் யாழ்ப்பாணத்தில் கோப்பாய் கட்டப்பிறை பகுதியில் நேற்றிரவு (19-02-2023) இடம்பெற்றுள்ளது
பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து திருடர்கள் 16 பவுன் நகைகளை திருடிச் சென்றமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆசிரியர் 2 நாட்களாக வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தடயவியல் மற்றும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.