வியட்நாமில் திருட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைது!

வியட்நாமில் உள்ள இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் மீது பணம் திருடியதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த  42 வயதான அருண ருக்ஷான் ராஜபக்ச என்பவர் பணம் திருடியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த 2020 மார்ச் முதலாம் திகதி ஹோ சி மின் நகரில் உள்ள ‘டான் சோன் நாட்’ சர்வதேச விமான நிலையம் வழியாக வியட்நாமிற்குள் சென்றுள்ளார்.வியட்நாமின் பல பகுதிகளிலும் வேலை தேடி அலைந்த நபர் வேலை கிடைக்காமையினால் 2022 ஆண்டு அக்டோபர் 11 ஆம் திகதி, ஹனோயின் ஹோன் கீம் மாவட்டத்தின் வீதிகளில் மற்றவர்களின் சொத்துக்களை திருடும் நோக்கத்துடன் சுற்றி அலைந்துள்ளார்.

அந்த சமயம் உணவகம் ஒன்றிற்குள் நுழைந்து  13 மில்லியன் வியட்நாம் டோங் (545 அமெரிக்க டொலர்) பணம் அடங்கிய கறுப்பு கைப்பையை திருடி சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கு வசிக்கும் உள்ளூர் மக்களின் உதவியுடன் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட இலங்கையை சேர்ந்த நபர் மடக்கி பிடிக்கப்பட்டு  தாய் டு வார்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது அதனை அடுத்து திருடப்பட்ட கைப்பை அவரிடம் இருந்த நிலையில் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது