யாழில் விபத்தை ஏற்ப்படுத்தி விட்டு தப்பிச் சென்ற  இளைஞன்

யாழில் இருந்து காரைநகருக்கு துவிச்சக்கர வண்டியில் மது போதையில் சென்று கொண்டிருந்த இளைஞர் அவ் வழியால் துவிச்சக்கர வண்டியில் வந்த இளம் குடும்ப பெண் மீது மோதித்தள்ளி விட்டு தப்பி ஓடியுள்ளார் குறித்த சம்பவம் நேற்று இரவு 8.45மணி அளவில் யாழ்ப்பாணம் கொட்டடியில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலை ஒன்றின்அருகில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் பலசரக்கு கடை ஒன்றிற்கு வந்த நிலையிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது விபத்திற்கு உள்ளான பெண் சிறு காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளார்